நீட் விலக்கிற்கு குடியரசு தலைவர் ஒப்புதலை பெற ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: திமுக அரசு, நீட் விலக்கு சட்டத்தை கடந்த செப்டம்பர் 13ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி வைத்தது. அதன்பின் 105 நாட்களாகும் நிலையில், அச்சட்டத்திற்கு இன்று வரை ஆளுனரின் ஒப்புதல் கிடைக்கவில்லை. எனவே, விரைவில் நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, அடுத்த ஆண்டு முதல் 12ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்….

The post நீட் விலக்கிற்கு குடியரசு தலைவர் ஒப்புதலை பெற ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: