நெல்லை அருகே உரிமை கோரப்படாத உடலை நல்லடக்கம் செய்த போலீசார்

நெல்லை : நெல்லை அருகே ராதாபுரத்தில் உரிமை கோரப்படாத நிலையில் இறந்தவரின் உடலை ராதாபுரம் போலீசார் தாமாக முன்வந்து நல்லடக்கம் செய்தனர்.ராதாபுரம் அரசு மருத்துவமனைக்கு கடந்த ஆக. 31ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நிமாஸ் சமாசி(45) என்பவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மேல்சிகிச்சைக்காக அவர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 5ம் தேதி அவர் இறந்தார். பின்னர் அவரின் உடலை யாரும் உரிமை கோரவில்லை. இதைத்தொடர்ந்து ராதாபுரம் எஸ்எஸ்ஐ கிருஷ்ணராஜ், தலைமை காவலர்கள் ஜெகதீஷ், சிங்காரவேலன், ராதாபுரம் கிராம உதவியாளர் முத்துராஜா ஆகியோர் தாமாக முன்வந்து இறந்தவரின் உடலை பட்டார்குளம் ஜங்ஷன் அருகே அரசு நிலத்தில் நல்லடக்கம் செய்தனர்.

The post நெல்லை அருகே உரிமை கோரப்படாத உடலை நல்லடக்கம் செய்த போலீசார் appeared first on Dinakaran.

Related Stories: