கும்பகோணத்தில் பயங்கரம் மனைவி கழுத்தை நெரித்து கொன்ற கொடூர கணவர்

*உடலை ஆற்றில் வீச முயன்ற போது போலீசில் சிக்கினார்

கும்பகோணம் : கும்பகோணத்தில் மனைவி கழுத்தை நெரித்து கொன்று உடலை ஆற்றில் வீச முயன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகர கம்பர் தெரு அடுத்த பத்தடிபாலம் தெருவில் வசிப்பவர் ராஜா (45). மாநகராட்சியில் முன்னாள் தற்காலிக தூய்மை பணியாளரான இவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து அம்சவள்ளி (41) என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இதில் அம்சவள்ளிக்கு ஏற்கனவே திருமணமாகி 2 கணவர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு வெளியில் சென்ற அம்சவள்ளி, வீட்டுக்கு வந்தபோது எங்கு சென்றாய் என்று ராஜா கேட்டுள்ளார். இதில், இருவருக்கும் வாக்குவாதம் எற்பட்டது. அதில், ஆத்திரமடைந்த ராஜா, அம்சவள்ளியை மூங்கில் கட்டையால் தாக்கி, கழுத்தை நெரித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து ராஜா, அம்சவள்ளியை தூக்கிக்கொண்டு ஆற்றில் வீசுவதற்காக சென்றுள்ளார். அப்போது அக்கம்பக்கத்தினர் ராஜாவை நிறுத்தி விசாரித்தபோது மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவர்கள், 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அம்சவள்ளியை பரிசோதித்த போது, அவர் ஏற்கெனவே இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து, தகவலறிந்த மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அம்சவள்ளியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து ராஜாவை கைது செய்தனர்.

The post கும்பகோணத்தில் பயங்கரம் மனைவி கழுத்தை நெரித்து கொன்ற கொடூர கணவர் appeared first on Dinakaran.

Related Stories: