அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் இருந்ததால், அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணையில், அவர் ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீ காளிகாபுரம், வன்னியர் தெருவைச் சேர்ந்த ராஜூ (40) என்பதும், விற்பனை செய்வதற்காக குட்கா பொருட்களை ஆந்திராவில் இருந்து ஆர்.கே.பேட்டைக்கு கடத்தி வருவதும் தெரியவந்தது. அவரிடமிருந்து பைக் மற்றும் சுமார் 15 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருத்தணி கிளை சிறையில் அடைத்தனர்.
The post பைக்கில் குட்கா கடத்திய வாலிபர் கைது: 15 கிலோ, பைக் பறிமுதல் appeared first on Dinakaran.