ஆம்பூர் அருகே இன்று அதிகாலை பள்ளத்தில் கார் கவிழ்ந்து தீப்பிடித்தது பெண் உள்ளிட்ட 4 பேர் தப்பினர்

ஆம்பூர்: ஆம்பூர் அருகே உடையராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை கார் கவிழ்ந்து தீப்பிடித்தது. இதில் பயணம் செய்த பெண் உள்ளிட்ட 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை நீலாங்கரை பிஸ்மில்லா நகரை சேர்ந்தவர் சாதிக் என்பவரின் மகன் ஆஷிக்(23). சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடன் நேற்று ஒரு பெண் உள்ளிட்ட 3 ஆண்கள் காரில் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிக்கு வந்தனர். காரை ஆஷிக் ஓட்டி வந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உடையராஜபாளையம் அருகே இன்று அதிகாலை வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. காரில் இருந்தவர்கள் வெளியேறிய நிலையில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்த ஆம்பூர் தீயணைப்பு படையினர் உடனே அங்கு விரைந்து சென்று கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்தனர்.இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர். கார் கவிழ்ந்த உடன் அதில் இருந்த 4 பேரும் உடனடியாக வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் தப்பினர்.

The post ஆம்பூர் அருகே இன்று அதிகாலை பள்ளத்தில் கார் கவிழ்ந்து தீப்பிடித்தது பெண் உள்ளிட்ட 4 பேர் தப்பினர் appeared first on Dinakaran.

Related Stories: