திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உடையராஜபாளையம் அருகே இன்று அதிகாலை வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. காரில் இருந்தவர்கள் வெளியேறிய நிலையில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்த ஆம்பூர் தீயணைப்பு படையினர் உடனே அங்கு விரைந்து சென்று கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்தனர்.இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர். கார் கவிழ்ந்த உடன் அதில் இருந்த 4 பேரும் உடனடியாக வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் தப்பினர்.
The post ஆம்பூர் அருகே இன்று அதிகாலை பள்ளத்தில் கார் கவிழ்ந்து தீப்பிடித்தது பெண் உள்ளிட்ட 4 பேர் தப்பினர் appeared first on Dinakaran.