டெல்லியில் கேங்ஸ்டர் சுட்டுக்கொலை..!!

டெல்லி: டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் நாதிர்ஷா என்ற கேங்ஸ்டர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஜிம்மிற்கு வெளியே நின்று கொண்டிருந்த நாதிர்ஷாவை மர்ம நபர் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடினார். சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நாதிர்ஷா முன்விரோதம் காரணமாக சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். ரோஹித் கோதாரா என்ற மற்றொரு கேங்ஸ்டர் கொலைக்கு மூளையாக செயல்பட்டது விசாரணையில் அம்பலமானது.

The post டெல்லியில் கேங்ஸ்டர் சுட்டுக்கொலை..!! appeared first on Dinakaran.

Related Stories: