சித்தராமையா வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் மைசூரு மாநகர வளர்ச்சி குழுமம் (மூடா) சார்பில் முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளதாக வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்கி ஆளுநர் கடந்த மாதம் 16ம் தேதி ஒப்புதல் வழங்கினார். இதை எதிர்த்து முதல்வர் சித்தராமையா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி எம். நாகபிரசன்னா முன்பு இறுதி விசாரணை நேற்று நடைபெற்றது. இவ்வழக்கின் இறுதி வாதம் முடிந்ததை தொடர்ந்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்தி வைத்தார்.

The post சித்தராமையா வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: