சிபிஐ கைதுக்கு எதிராக மனு கெஜ்ரிவால் வழக்கில் இன்று தீர்ப்பு

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கில் ஜூலை 12ம் தேதி உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சிபிஐ, அவரை ஜூன் 26ம் தேதி கைது செய்ததால் வௌியே வர முடியாத சூழல் உள்ளது. சிபிஐ கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

The post சிபிஐ கைதுக்கு எதிராக மனு கெஜ்ரிவால் வழக்கில் இன்று தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: