முடிவுகள் ஓரிரு நாட்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அறியப்பட்ட வைரசா அல்லது புதியதா என்பதை பின்னர் தான் அறிவிக்க முடியும். இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் எச்1என்1, பன்றிக்காய்ச்சல், கிரிமியன்-காங்கோ காய்ச்சல், மலேரியா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இறப்புகள் மாசுபாடு அல்லது தொற்று நோயால் ஏற்பட்டதாகத் தெரியவில்லை‘ என்றார். மேலும் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள லக்பத்தில், 22 கண்காணிப்பு குழுக்கள் மற்றும் டாக்டர்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post 7 குழந்தைகள் உட்பட 15 பேர் மர்ம காய்ச்சலுக்கு பலி: குஜராத்தில் சோகம் appeared first on Dinakaran.