சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வழக்கில் பதில் தர ஐகோர்ட் ஆணை!!

சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிலத்தை குறைந்த வாடகைக்கு குத்தகைக்கு விட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இந்து அறநிலையத்துறை பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிரீன்வேஸ் சாலையில் உள்ள ரூ.40 கோடி மதிப்பிலான 10 கிரவுண்ட் கோயில் நிலத்தை குறைந்த வாடகைக்கு விட்டதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. 2010 முதல் 29 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3000 வாடகை வீதம் இந்திய மாதர் சங்கத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டது. 2011-ல் பிறப்பித்த அரசாணையை ரத்துசெய்யக் கோரி டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

The post சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வழக்கில் பதில் தர ஐகோர்ட் ஆணை!! appeared first on Dinakaran.

Related Stories: