48வது நினைவு நாளையொட்டி பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தந்தை பெரியாரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகில் உள்ள அவரது சிலைக்கு நேற்று காலை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர்கள் அ.ராசா, அந்தியூர் செல்வராஜ், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, கலாநிதி வீராசாமி எம்பி, எம்எல்ஏக்கள் மாதவரம் சுதர்சனம், தாயகம் கவி, ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, ஐட்ரீம் மூர்த்தி, மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு, சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், பகுதி செயலாளர் மதன் மோகன், வர்த்தகர் அணி துணை செயலாளர் வி.பி.மணி, தலைமை நிலைய செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி முருகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பெரியார் நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஈராயிரம் ஆண்டுகள் அடக்கப்பட்ட இனத்தின் மான உணர்ச்சியைத் தட்டியெழுப்பி, சுயமரியாதை ஒன்றே அடிமை விலங்கைத் தகர்த்தெறியும் விடுதலைக்கான வழி எனத் தொண்டாற்றிய தந்தை பெரியாரின் நினைவுநாளில், ஆதிக்கச் சக்திகளின் சூழ்ச்சிகளை வென்று-திராவிடக் கொள்கைகள் கொண்டு தமிழர் மானம் காக்கச் சூளுரைப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post 48வது நினைவு நாளையொட்டி பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: