பொங்கல் பண்டிகையையொட்டி ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது. அடுத்தாண்டு ஜனவரி 14 முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 10ஆம் தேதி ரயிலில் பயணம் செய்வோர் இன்று டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஜன.11இல் பயணிப்போர் 13ஆம் தேதியும். ஜன. 12இல் பயணிப்போர் 14ஆம் தேதியும் முன்பதிவு செய்யலாம். ஜனவரி 13ஆம் தேதி போகி பண்டிகையன்று பயணம் மேற்கொள்வோர் செப். 15இல் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post பொங்கல் பண்டிகையையொட்டி ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: