நாளை கூட்டுறவுச் சங்க பணியாளர் குறை கேட்கும் நிகழ்வு: கூடுதல் பதிவாளர் அறிவிப்பு

சென்னை: சென்னை மண்டல கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் மிருணாளினி வெளியிட்ட அறிக்கை: சென்னை மண்டலத்தில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கான பணியாளர் நாள் நிகழ்வு நாளை காலை 10.30 மணியளவில், சென்னை பிராட்வே பிரகாசம் சாலையில் அமைந்துள்ள சென்னை மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைமையகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. சென்னை மண்டலத்தில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் தங்களது குறைகளை பணியாளர் நாள் நிகழ்வில் கலந்து கொண்டு தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

The post நாளை கூட்டுறவுச் சங்க பணியாளர் குறை கேட்கும் நிகழ்வு: கூடுதல் பதிவாளர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: