செப்டம்பர் 13ம் தேதி ஜார்க்கண்டில் நடக்கும் இந்த குத்துச் சண்டை போட்டியில், 50 கிலோவுக்கு மேல் எடையுடைய 14 வயது மாணவர்கள் பிரிவு நீக்கப்பட்டது. இதை எதிர்த்து அல்பெரிக் அபய் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்தாண்டு 50 கிலோவுக்கு மேல் உள்ள மாணவிகள் பிரிவு சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் பிரிவை நீக்கியது பாரபட்சமானது. இதுசம்பந்தமான சி.ஐ.எஸ்.சி.இயின் அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. ஜார்க்கண்டில் செப்டம்பர் 13ம் தேதி நடக்கும் குத்துச் சண்டை போட்டிகளில், 50 கிலோவுக்கு அதிகமான எடையுள்ள 14 வயது மாணவர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சி.ஐ.எஸ்.சி.இக்கு உத்தரவிட்டார்.
The post சி.ஐ.எஸ்.சி.இ. தேசிய விளையாட்டு போட்டியில் குத்துச்சண்டை போட்டியை நீக்கிய அறிவிப்பு ரத்து: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.