18 கிலோ தங்க கடத்தல் முக்கிய குற்றவாளி கைது: என்ஐஏ அதிரடி

புதுடெல்லி: சர்வதேச தங்க கடத்தல் கும்பலின் தலைவனை தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.  2020ம் ஆண்டு சவுதி அரேபியாவில் இருந்து ஜெய்பூர் விமான நிலையத்துக்கு ரூ.9 கோடி மதிப்பிலான 18.56 கிலோ தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டன.

இதுதொடர்பான வழக்கில் ஏற்கனவே ஷோகத் அலி மற்றும் மொகபத் அலி ஆகியோர் ஏற்கனவே சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 3வது மற்றும் முக்கிய குற்றவாளியான முனியத் அலிகான் நேற்று ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து ஜெய்பூர் விமான நிலையத்திற்கு வந்தார். முனியத் அலிகானை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.

The post 18 கிலோ தங்க கடத்தல் முக்கிய குற்றவாளி கைது: என்ஐஏ அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: