சென்னையில் 4 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்க ஏற்பாடு..!!

சென்னை: சென்னையில் 4 இடங்களில் விநாயகர் சிலை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம். விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 16,500 போலீசார், 2000 ஊர்க்காவல் படையினரைக் கொண்டு சிறப்பு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் 4 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்க ஏற்பாடு..!! appeared first on Dinakaran.

Related Stories: