சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் சிபிசிஐடி விசாரணை!!

சேலம்: சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் சென்னையில் இருந்து சென்றுள்ள சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் சிறையில் உள்ள ஆயுள் கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்தி கொடுமைப்படுத்திய விவகாரம் தொடர்பாக, வேலூர் சிறைத்துறை டிஐஜி உள்பட 14 பேர் மீது சிபிசிஐடி வழக்கு பதிவுசெய்தது. கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்தி கொடுமைப்படுத்திய விவகாரம் எதிரொலியாக சிறைகளில் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மத்திய சிறையில் இன்றும் வேலூரில் நாளையும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

The post சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் சிபிசிஐடி விசாரணை!! appeared first on Dinakaran.

Related Stories: