அமைச்சர் பொன்முடி விடுதலையை எதிர்த்து தாமாக முன்வந்து ஐகோர்ட் எடுத்த வழக்கு தள்ளிவைப்பு

சென்னை: கடந்த 1996-2001ம் ஆண்டுகளில் தமிழக அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து குவித்ததாக 2002ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பின்னர், இந்த வழக்கு வேலூருக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், வேலூர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடிக்கு எதிரான வழக்கை 8 வாரங்களுக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

The post அமைச்சர் பொன்முடி விடுதலையை எதிர்த்து தாமாக முன்வந்து ஐகோர்ட் எடுத்த வழக்கு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: