புரட்சி பாரதம் கட்சி தலைவராக பூவை எம்.ஜெகன் மூர்த்தி 22 ஆண்டுகள் நிறைவு: மாபெரும் கிரிக்கெட் போட்டி

திருவள்ளூர்: புரட்சி பாரதம் கட்சியின் தலைவராக இருப்பவர் பூவை எம்.ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ. இவர் தலைவராக பொறுப்பேற்று 22 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இதையடுத்து தலைவருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் திருவள்ளூரை அடுத்த பாண்டூரில் உள்ள டிஇஎல்சி காபிஸ் மேல்நிலைப் பள்ளியில் கால்பந்து போட்டி நடைபெற்றது.

இதற்கு மாநில செயலாளர் பழஞ்சூர் பி.வின்சென்ட், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கே.எம்.தர் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் பி.சைமன்பாபு வரவேற்றார். இந்த கால் பந்தாட்ட போட்டியில் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை எம்.ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், பரிசுக் கோப்பை, இரண்டாம் பரிசாக ரூ.30 ஆயிரம் மற்றும் பரிசுக் கோப்பை, மூன்றாம் பரிசாக ரூ.20 ஆயிரம் மற்றும் பரிசுக் கோப்பை, நான்காம் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் பரிசுக்கோப்பை வழங்கி வாழ்த்தி பேசினார்.

விழாவில் மாநில நிர்வாகிகள் முல்லை பலராமன், பூண்டி பாபு, டி.கே.சீனிவாசன், கே.எஸ்.ரகுநாத், என்.மதிவாசன், மாவட்ட பொருளாளர் எஸ்.பார்த்திபன், எம்.ஆர்.ராஜேந்திரன், செஞ்சி தர், ஒன்றிய நிர்வாகிகள் பி.தாமஸ், பொன்னுதுரை, சி.சரவணன், டி.சுரேஷ், தேவா, அமரேஷ், ஜான்மேஜர், டி.பரணி, தர், சாரதி, மதுரை, சரத், வெங்கட், நாகராஜ், சிவகுமார், பரமசிவம், பிரேம், கமலக்கண்ணன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post புரட்சி பாரதம் கட்சி தலைவராக பூவை எம்.ஜெகன் மூர்த்தி 22 ஆண்டுகள் நிறைவு: மாபெரும் கிரிக்கெட் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: