பின்னர் விநாயகப்பெருமான் தங்கமூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் சப்பரத்திலும் கோயில் குளம் முன்பு எழுந்தருளினர். பின்னர் குளத்தின் படிக்கட்டில் அங்குசதேவருக்கு 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, தீபாதனை நடந்தது. பின்னர் சிவாச்சாரியர், அங்குசத்தேவருடன் குளத்தில் 3 முறை மூழ்கி எழ, விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர் வீதி உலா நடந்தது. மதியம் உச்சிகால பூஜையில் மூலவருக்கு 18 படி அரிசியால் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெறுகிறது.
The post விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கோயிலில் தீர்த்தவாரி உற்சவம் கோலாகலம் appeared first on Dinakaran.