விமானத்தில் வந்த சிறுமிக்கு ஒமிக்ரானா?

சென்னை: ஸ்வீடன் நாட்டிலிருந்து தோகா வழியாக கத்தார் ஏர்லைன்ஸ்  விமானத்தில் சென்னை வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரில் 10 வயது சிறுமிக்கு நடந்த ஆர்டி- பிசிஆர் பரிசோதனையில் பாசிடீவ் என்று வந்தது. இதையடுத்து சிறுமி உடனடியாக சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அதோடு சிறுமிக்கு ஏற்பட்டுள்ளது டெல்டா வைரசா அல்லது ஒமிக்ரான் வைரஸ் தொற்றா என்பதை கண்டறிய, மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக ஆய்வு கூடத்துக்கு அனுப்பப்படுகிறது. சிறுமியுடன் வந்த தந்தை, தாய், 6 வயது குழந்தை ஆகியோரையும் தனிப்படுத்தி பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த 10 வயது சிறுமியின் குடும்பத்தினர் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர்கள்….

The post விமானத்தில் வந்த சிறுமிக்கு ஒமிக்ரானா? appeared first on Dinakaran.

Related Stories: