புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

அறந்தாங்கி, செப்.5: மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு எழுதுப்பொருட்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் அறிவுறுத்தலின்படி மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழியன் மற்றும் அமுதா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு எழுதுப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் தலைமை வகித்தார்.ஆசிரியர் பயிற்றுநர்கள் சசிக்குமார் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில்புதிய பாரத தன்னார்வலர்களிடம் எழுத படிக்க தெரியாத கற்போருக்கு தினமும் பயிற்சி கொடுக்கப்பட வேண்டும் என்றும், கற்போர் தங்களுடைய பெயர் தங்களுடைய ஊர் பெயர் எழுதப் படிக்க கையெழுத்து போடுவதற்கு பயிற்சி தினமும் வழங்க வேண்டும் என்றும், கற்போர் வருகையினை தினமும் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் மற்றும் வாழ்வியல் திறன்களையும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. மணமேல்குடி ஒன்றியத்தில் 53 புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையங்கள் உள்ளது. மையங்களுக்கு தேவையான எழுது பலகை, நோட்டு, வருகை பதிவேடு, குச்சி, ரப்பர் ஷார்பினர் மற்றும் பேனா போன்றவை 53 மையங்களுக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆசிரியர் கண்ணன் மற்றும் 53 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

The post புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு உபகரணங்கள் வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: