அகமதாபாத்: அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் பயணித்த பெண் பயணி மாரடைப்பால் உயிரிழந்தார். அந்தமானைச் சேர்ந்த சபித்ரி (50) என்ற பெண் பயணி விமானத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். நடுவானில் சென்ற விமானத்தில் பெண் பயணி சபித்ரி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.