இந்நிலையில் மத்திய பாட திட்டத்திற்கு ஆதரவாகவும், மாநில பாட திட்டத்தை தரம் குறைந்தது என்று பேசுவது ஆளுநரின் அராஜக போக்கையே காட்டுகிறது. ஆர்.என்.ரவி தமிழகத்தின் ஆளுநரா அல்லது பா.ஜ.வின் செய்தி தொடர்பாளரா என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, கல்வித்துறையில் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக திகழ்கிற தமிழகத்தின் பாடத் திட்டத்தை தரம் குறைந்தது என்று பேசுவது ஆளுநரின் அதிகார மமதையையே காட்டுகிறது. இத்தகைய தமிழக விரோத பேச்சை ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டுமென எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழகத்தின் பாடத்திட்டத்தை தரம் குறைந்தது என்பதா?: ஆர்.என்.ரவிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் appeared first on Dinakaran.