பூஜாரிகள் பேரமைப்பு நிர்வாகிகள் கூட்டம்

 

திண்டுக்கல், செப். 2: திண்டுக்கல்லில் பூஜாரிகள் பேரமைப்பு சார்பில் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.மாநில இணை செயலாளர் உதயகுமார் தலைமை வகித்தார்.மாவட்டத் துணைத் தலைவர் சரவணகுமார் முன்னிலை வகித்தார். செயலாளர் சந்தோஷ் குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில இணைச் செயலாளர் உதயகுமார் சிவாச்சாரியார் வாழ்த்துரை வழங்கினார்.

கூட்டத்தில், நலிவடைந்த கோயில்களுக்கு இலவச 100 யூனிட் மின்சாரம் வழங்க வேண்டும். செப்டம்பர் மாதம் சேலத்தில் நடைபெறும் மாநில அளவிலான பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும். நல வாரியத்தில் நல வாரிய அட்டை, ஓய்வூதியம் ஆகியவற்றை நிலுவையில் வைக்காமல் உடனடியாக வழங்க வேண்டும். உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில், மாநகர ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பூஜாரிகள் பலர் கலந்து கொண்டனர். செய்தி தொடர்பு செயலாளர் குமார் நன்றி கூறினார்.

The post பூஜாரிகள் பேரமைப்பு நிர்வாகிகள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: