முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க விழா

சேலம், செப்.1: விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில், முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு துறையின் டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து தொடங்கி வைத்தார். துறையின் பேராசிரியை தமிழ்ச்சுடர் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பேச்சாளர், தொகுப்பாளர் மற்றும் நடிகர் ஈரோடு மகேஷ் பங்கேற்று, மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக பல்கலைக்கழகத்தின் மாணவ செயல்முறை பயிற்சி இயக்குனர் ஜெய்கர், புதுமை படைத்தல் மற்றும் தொழில்முனைவோர் அமைப்பின் இயக்குனர் ஞானசேகர் மற்றும் மாணவ நல இயக்குனர் சண்முகசுந்தரம், துறை பேராசிரியை பிரியாமதி ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். துறையின் மூத்த மாணவர்கள், தங்களின் கல்லூரி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பேராசிரியை கலைவாணி நன்றி கூறினார்.

The post முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க விழா appeared first on Dinakaran.

Related Stories: