* இவ்வளவு நாள் மறைத்தது ஏன்?
ராதிகாவின் கருத்து குறித்து மலையாள டப்பிங் கலைஞர் பாக்கியலட்சுமி கூறுகையில், ‘‘கேரவனில் ரகசிய கேமரா வைத்து நடிகைகள் உடைமாற்றும் காட்சிகளை சிலர் பார்த்ததாக இப்போதுதான் ராதிகா கூறியுள்ளார். இவ்வளவு நாள் அதை மூடி மறைத்தது ஏன்? இதன் மூலம் குற்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற அவர் உதவி புரிந்துள்ளார் என்றே கருதவேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
சென்னை: ஹேமா கமிட்டி அறிக்கை மற்றும் மலையாள நடிகைகளின் பாலியல் புகார்கள் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்த நடிகர் மோகன்லால் நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து மலையாள நடிகர்கள் சங்கம் மட்டுமே பதில் சொல்ல வேண்டும் என்று நினைப்பது தவறாகும். நடிகர்கள் சங்கத்தை மட்டுமே அனைவரும் குற்றம் சொல்கின்றனர். தயவுசெய்து மலையாள சினிமாவை அழித்துவிட வேண்டாம். நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. எனது மனைவியின் அறுவை சிகிச்சை, நான் டைரக்ட் செய்யும் படத்திற்கான பணிகள் ஆகிய காரணங்களால் குஜராத், மும்பை, சென்னை ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. அதனால்தான் விளக்கம் அளிக்க சற்று தாமதமானது. இவ்வாறு கூறினார்.
The post கேரவனில் ரகசியமாக கேமரா வைத்து நடிகைகள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்து ரசித்த நடிகர்கள்: நேரடியாக பார்த்ததாக நடிகை ராதிகா பகீர் தகவல் appeared first on Dinakaran.