கறம்பக்குடி அருகே மது பாட்டில் விற்ற வாலிபர் கைது

 

கறம்பக்குடி,ஆக.30: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஆத்தங்கரை விடுதி தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் கமலக்கண்ணன். (40). இவர் அரசு அனுமதியின்றி மதுபானம் விற்பதாக கறம்பக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் படி எஸ்ஐ மாதேஸ்வரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கமலக்கண்ணன், குலப்பெண்பட்டி பேருந்து நிறுத்தத்தில் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து, அவரிடம் இருந்து பாண்டிச்சேரி மதுபான பாட்டில்கள் 18 பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கமலக்கண்ணனை கைது செய்தனர்.

The post கறம்பக்குடி அருகே மது பாட்டில் விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: