மாணவ பருவத்திலிருந்தே விளையாட்டில் ஆர்வம் செலுத்தினால் உடல் மன வலிமையுடன் கூடிய ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும்

*விழிப்புணர்வு பேரணியை தொடங்கி கலெக்டர் பேச்சு

திருப்பதி : மாணவ பருவத்திலிருந்தே விளையாட்டில் ஆர்வம் செலுத்தினால் உடல் மன வலிமையுடன் கூடிய ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும் என விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்து பேசினார். ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்தின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் தேசிய விளையாட்டு தினத்தை ஒட்டி திருப்பதி ஸ்ரீனிவாசா விளையாட்டு வளாகம், பாலாஜி காலனியில் இருந்து மகதி ஆடிட்டோரியம் வரை நடைபெற்ற பேரணியை கலெக்டர் வெங்கடேஸ்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது கலெக்டர் வெங்கடேஷ்வர் பேசியதாவது: ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த் ஒரு சிறந்த ஹாக்கி வீரர். இவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் 2024-ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு தினம் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.

கடந்த 26ம் தேதி முதல் கல்லூரி, பள்ளிகளில் பல விளையாட்டு போட்டிகள் மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக வேலை அழுத்தம், மன உளைச்சல், செல்போன், சமூக வலைதளங்கள் போன்றவற்றின் அதிகப்படியான பயன்பாடு, விளையாட்டு ஆர்வம், நேர ஒதுக்கீடு, உடல் உடற்பயிற்சி போன்றவற்றால் மக்களும் இளைஞர்களும் அன்றாட வாழ்வில் ஏற்படும் வேலை அழுத்தத்தால், இதனால் சிறுவயதிலிருந்தே பி.பி., சர்க்கரை நோய் போன்ற பல நோய்களால் அவதிப்படுகின்றனர்.

இவற்றில் இருந்து விடுபட ஒவ்வொருவரும் தங்களது அன்றாட வாழ்வில் குறைந்தது 30 நிமிடங்களாவது விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
இதன் மூலம் ஆரோக்கியமான நல்ல சமுதாயம் உருவாகும். படிப்புடன், விளையாட்டு, உடற்பயிற்சி ஆகியவற்றை மாணவர் பருவத்திலிருந்தே அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம் உடல் மற்றும் மன வலிமை மட்டுமின்றி, குழு உணர்வும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார். பேரணி தொடங்கும் முன் தயான் சந்தின் படத்திற்கு கலெக்டர் மாலை அணிவித்து, அனைவருடனும் விளையாட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

The post மாணவ பருவத்திலிருந்தே விளையாட்டில் ஆர்வம் செலுத்தினால் உடல் மன வலிமையுடன் கூடிய ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும் appeared first on Dinakaran.

Related Stories: