தனி மனித சுதந்திரம் என்பது எப்போதுமே ஒரே விதி தான்; அதனை சட்ட நடைமுறையின் மூலம் பறிப்பது விதிவிலக்கானது. அதனை கண்டிப்பாக ஏற்க முடியாது. சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஜாமீன் பெறுவதற்கான நடைமுறைகள் கடுமையாக இருப்பது கொள்கையை மீறியதாகும். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரை விசாரணை அலுவலகத்தில் வைத்து, விசாரணை அதிகாரிகள் முன்பு ஒருவர் அளித்த வாக்குமூலங்கள் ஏற்கப்படாது. மேலும் இவ்வழக்கில் பிரேம் பிரகாஷ் பிரதானமானவர் அல்ல; மேலும் அவர் சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை அழிக்கவும் வாய்ப்பு கிடையாது. அதனை நீதிமன்றம் கருத்தில் கொண்டுள்ளது.
மேலும் இவ்வழக்கில் விசாரிக்கப்பட வேண்டிய சாட்சிகள் அதிகம் பேர் உள்ளதால், விசாரணை தாமதமாகி வருகிறது. அதுவரையில் குற்றம்சாட்டப்பட்ட நபர் சிறையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே இந்த வழக்கு விவகாரத்தில் பிரேம் பிரகாசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குகிறோம். அவர் விசாரணை அதிகாரிகள் அழைக்கும் போது அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வெளிநாடுகளுக்கோ அல்லது மற்ற மாநிலங்களுக்கோ செல்லக் கூடாது. வழக்கு தொடர்பான சாட்சியங்களை சந்திக்கவோ அல்லது கலைக்கவோ கூடாது’ என்று தீர்ப்பளித்த நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
The post ஜார்கண்ட் முதல்வரின் நண்பர் மீதான வழக்கு; ஜாமீன் வழங்குவது விதி,சிறை என்பது விதிவிலக்கு: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.