கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடி

 

கோத்தகிரி, ஆக.28: கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, உணவு தேடி கரடிகள் அடிக்கடி பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு, சாலைகளில் உலா வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

கடந்த ஒரு வாரமாக கோத்தகிரி அருகே உள்ள பனஹட்டி பகுதியில் கரடி ஒன்று பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக உலா வருகிறது. இதனால், இரவு நேரங்களில் குடியிருப்பு வாசிகள் வீடுகளை விட்டு வெளியே வர அச்சமடைந்து உள்ளனர். எனவே, வனத்துறையினர் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடி appeared first on Dinakaran.

Related Stories: