செல்போன் வாங்கி தராததால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள், விவசாயி. இவரது மகன் வெற்றிவேல், பிளஸ்1 படித்து வந்தார். அவர் தந்தையிடம் விலை உயர்ந்த செல்போன் வாங்கி கேட்டுள்ளார். அவர் வாங்கி தராததால் மனம் உடைந்த வெற்றிவேல், தங்கள் விவசாய நிலத்தில் உள்ள கொட்டகையில் நேற்று முன்தினம் இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post செல்போன் வாங்கி தராததால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: