எனவே இச்சட்டத்தின் தண்டனைகள் போதுமானதாக இல்லாததால், சட்ட திருத்தம் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, முதல் முறை தவறு செய்பவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம், மீண்டும் சட்டத்தை மீறுவோருக்கு ரூ.5 லட்சம் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்க நுகர்வோர் விவகார அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு அமைச்சகத்தின் கருத்துக்களும் கேட்கப்பட்டுள்ளன. இந்த திருத்தங்கள் கொண்டு வரப்படும் பட்சத்தில் 74 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய சின்னங்கள் மற்றும் பெயர்கள் சட்டத்தில் கொண்டு வரப்படும் முதல் திருத்தமாக இருக்கும்.
The post ஒன்றிய அரசின் அனுமதியின்றி தேசிய சின்னம், பெயரை பயன்படுத்தினால் சிறை: சட்ட திருத்தம் செய்ய திட்டம் appeared first on Dinakaran.