தற்போதுள்ள திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்தில் 1100 இரு சக்கர வாகனங்களை நிறுத்த முடியும். இந்த கூடுதல் வாகன நிறுத்தும் வசதி மூலம் கூடுதலாக வாகனங்களை நிறுத்த முடியும். இந்த வாகன நிறுத்தும் வசதியை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்), இன்று திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் கூடுதல் பொது மேலாளர் எஸ்.சதீஷ் பிரபு (தொடர்வண்டி மற்றும் இயக்கம்), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
The post திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் வசதி..!! appeared first on Dinakaran.