மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சேலம், ஆக.27: சேலம் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட சேலம் தெற்கு கோட்ட மின் நுகர்வோர்களுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம், நாளை (28ம் தேதி) காலை 11 மணிக்கு அன்னதானப்பட்டி வள்ளுவர்நகர் ஸ்டேட் பாங்க் எதிரே உள்ள தெற்கு கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. மேற்பார்வை பொறியாளர் (பொ) புஷ்பலதா கலந்து கொண்டு, குறைகளை கேட்டறிகிறார். அதனால், சேலம் தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள், நேரில் வந்து மின்சாரம் தொடர்பான குறைகள் இருந்தால், அதனை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இத்தகவலை செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

The post மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: