பெண்ணிடம் 8 பவுன் பறித்த முகமூடி திருடன்

 

காடையாம்பட்டி, செப்.10: சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகா, கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி காலனியைச் சேர்ந்தவர் சின்னதங்கம். இவரது மனைவி சின்னத்தாயி (55). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி, தனித்தனியே வசித்து வருகின்றனர். சின்னதங்கம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், சின்னத்தாயி அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை, காடையாம்பட்டி பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அந்த நேரத்தில் கடையின் முன்பு சின்னத்தாயி நின்றிருந்தார்.

அப்போது அங்கு கர்ச்சீப்பை கொண்டு முகத்தை மூடியபடி வந்த வாலிபர் ஒருவர், கண்ணிமைக்கும் நேரத்தில் சின்னத்தாயி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பியோடினார். இதனால் அதிர்ச்சியடைந்த சின்னத்தாயி, திருடன் என சத்தம் போட்டார். ஆனால், மழை பெய்து கொண்டு இருந்ததால் அக்கம் பக்கத்தில் யாரும் வரவில்லை.
இதுகுறித்து சின்னத்தாயி தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்குபதிவு செய்த இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார், சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

The post பெண்ணிடம் 8 பவுன் பறித்த முகமூடி திருடன் appeared first on Dinakaran.

Related Stories: