கீரனூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஆக.27: கீரனூரில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் விடுதலை கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் விடுதலை கட்சி சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாநில செயலாளர் விடுதலை குமரன் உள்ளிட்டோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கீரனூர் அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.

கீரனூர் அரசு மருத்துவமனைக்கு குடிநீர் வசதி செய்துதர வேண்டும். கீரனூர் வருகின்ற அனைத்து பேருந்துகளும், பைபாஸ் ரோட்டில் செல்லாமல் கீரனூர் பேருந்து நிலையம் வந்துசெல்வதை கட்டாயமாக்க வேண்டும். குளத்தூர் தாலுகா முழுவதும் ஆய்வு செய்து மனையற்ற அனைவருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பத உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியை சேர்ந்த பலர் கலந்து ெகாண்டனர்.

The post கீரனூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: