விசாரணையில், விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி பிரகாஷ் (எ) சுருக்கு சூர்யா(23), இவரது கூட்டாளிகள் அருண்குமார்(19), சதீஷ்(26) என தெரியவந்தது. இவர்கள், மும்பையில் இருந்து ஒரு மாத்திரை ₹50 வீதம் வாங்கி வந்து, 10 மாத்திரைகளை ₹3 ஆயிரத்தில் இருந்து ₹5 ஆயிரம் வரை விற்பனை செய்து லட்சக்கணக்கில் சம்பாதித்ததும், அந்த பணத்தில் சொகுசாக வாழ்ந்தது தெரிந்தது.
இவர்களிடம் இருந்து 430 போதை மாத்திரைகள் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post 430 போதை மாத்திரைகள் பறிமுதல்: 3 பேர் கைது appeared first on Dinakaran.