உடனே எஸ்ஐ ராஜசேகரன், காரை நிறுத்திவிட்டு தகராறை தடுத்து அந்த நபரை மீட்டார். இதில் ஆத்திரம் அடைந்த 6 பேரும் அவரை ஆபாசமாக பேசி சட்டையை பிடித்து இழுத்து தாக்கினர். மேலும், 9 பேரை வரவழைத்து சரமாரி தாக்கியுள்ளனர். அவரது கார் மீது கல் வீசியதில் கண்ணாடி உடைந்தது. அருகில் நின்ற ரவி என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து செய்யாறு போலீசார் வழக்குப் பதிந்து 7 பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.
The post தகராறை தடுக்க முயன்ற சிஐடி எஸ்ஐ மீது கும்பல் தாக்குதல் appeared first on Dinakaran.