இந்தநிலையில் மோகன் இடம் அருகே சிங்களாந்தியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் லேத் பட்டறை நடத்தி வந்தார். இவர் 2 மாதத்துக்கு முன் இறந்து விட்டார். இதனால் அந்த பட்டறையை ஆறுமுகம் மகன் ராம்(20) நடத்தி வருகிறார். ராமுக்கும், மோகனுக்கும் இடையே இடத்தகராறு இருந்து வருகிறது. இதுதொடர்பாக ராமுக்கும், அருள் பிரகாசுக்கும் நேற்று மதியம் மீண்டும் இடத்தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் ராம், அவரது பெரியப்பா முருகேசன் மகன் விக்னேஸ்வரன்(28) மற்றும் சிலர் சேர்ந்து அருள் பிரகாசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் செங்கல்லால் தாக்கியுள்ளனர். இதில் தலையில் படுகாயமடைந்த அருள் பிரகாஷ் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து ராம், விக்னேஸ்வரனை இன்று காலை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
The post மதிமுக நகர செயலாளர் மகன் கல்லால் அடித்து கொலை: சகோதரர்கள் கைது appeared first on Dinakaran.