எடப்பாடி பழனிசாமி நாளை நீதிமன்றத்தில் ஆஜராகிறார்..!!

சென்னை: திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிசாமி நாளை நீதிமன்றத்தில் ஆஜராகிறார். எம்.பி., எம்.எல்.ஏ.க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜராக உள்ளதாக அதிமுக தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது உண்மைக்கு மாறான தகவல்களை எடப்பாடி பழனிசாமி கூறியதாக புகார் எழுந்தது. உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறியதாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

 

The post எடப்பாடி பழனிசாமி நாளை நீதிமன்றத்தில் ஆஜராகிறார்..!! appeared first on Dinakaran.

Related Stories: