திண்டுக்கலில் குடியிருப்பு பகுதியில் கிடந்த நாட்டு வெடிகுண்டுகளால் பரபரப்பு..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குடியிருப்பு பகுதியில் கிடந்த நாட்டு வெடிகுண்டுகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செந்துறை சாலை கலைநகர் குடியிருப்பு பகுதியில் சாலையோரம் 20க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகள் கிடந்துள்ளன. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். நேற்று நத்தம் அருகே வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், குடியிருப்பு பகுதியில் சிதறி கிடந்த நாட்டு வெடிகுண்டுகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post திண்டுக்கலில் குடியிருப்பு பகுதியில் கிடந்த நாட்டு வெடிகுண்டுகளால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: