மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த நபரின் செல்போன் சிக்னல், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை காட்டியது. விசாரணையில் அவர், தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே தலைவன்கோட்டை மெயின் ரோட்டைச் சேர்ந்த பூசைபாண்டியன் மகன் வெள்ளத்துரை (32) என்பது தெரிய வந்தது. அவரிடம் விசாரித்த போது, கடந்த ஆண்டும் இதேபோல் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாக வெள்ளத்துரை மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
The post எடப்பாடி பழனிசாமி மீது வெடிகுண்டு வீசுவோம்: மிரட்டல் விடுத்த வாலிபர் கைது appeared first on Dinakaran.