பட்டாசு ஆலையில் வானவெடி வெடித்து இருவர் கருகி பலி 2 பேர் படுகாயம்

குத்தாலம்: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே திருவாலங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருக்கு சொந்தமான வானவெடி தயாரிக்கும் ஆலை காவிரி ஆற்றங்கரை அருகே உள்ளது. நேற்று இந்த குடோனில் வெடி தயாரிக்கும் பணியில் 4 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென்று வான வெடி வெடித்து சிதறியது.

இதில் திருவாவடுதுறை மேலபுதுத்தெருவைச் சேர்ந்த கர்ணன் (25) என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். லட்சுமணன் (45), கலியபெருமாள்(52), குமார் (37) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அப்பகுதியினர் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சிஅ பலனின்றி லட்சுமணன் நேற்றிரவு உயிரிழந்தார். கலெக்டர் மகாபாரதி, எஸ்பி ஸ்டாலின் மற்றும் குத்தாலம் போலீசார் நேரில் விசாரணை நடத்தினர்.

The post பட்டாசு ஆலையில் வானவெடி வெடித்து இருவர் கருகி பலி 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: