கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் கிருஷ்ணகிரியில் தங்கி படித்து வந்த மாணவி, நேற்று முன்தினம் ஊருக்கு வருவதாக பெற்றோரிடம் கூறி விட்டு, நரசிம்மமூர்த்தியை பார்க்க கவுதாலம் கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு நரசிம்மமூர்த்தியின் வீட்டின் அருகே உள்ள ஒரு வீட்டில் தனியாக தங்கி உள்ளனர். நேற்று காலை இருவரும் அந்த வீட்டின் அறையில் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
The post போக்சோவில் கைதாகி ஜாமீனில் வந்த காதலனுடன் சிறுமி தற்கொலை appeared first on Dinakaran.