நேற்று முன்தினம் மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங்கை ராணுவ தளபதி உபேந்திர திவேதி சந்தித்து பேசினார். அப்போது மணிப்பூரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர். இரண்டாம் நாளான நேற்று மணிப்பூரின் சர்வதேச எல்லையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது பணியில் இருந்த வீரர்களுடன் கலந்துரையாடிய உபேந்திர திவேதி, தேசத்தை கட்டி எழுப்ப பாடுபடும் வீரர்களின் விலை மதிப்பற்ற அர்ப்பணிப்பை பாராட்டினார்.
The post மணிப்பூர் எல்லை பகுதியில் ராணுவ தளபதி திடீர் ஆய்வு appeared first on Dinakaran.