அகில இந்திய வணிகர் சம்மேளன தேசிய முதன்மை துணை தலைவராக விக்கிரமராஜா தேர்வு

சென்னை: அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் 25வது பொதுக்குழு கூட்டம், மகாஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தேசியத் தலைவர் பாலகிருஷ்ண பார்ட்டியா தலைமையில் நடைபெற்றது. அதில் தேசிய பொதுச்செயலாளரும், டெல்லி சாந்தினிசவுத் தொகுதி பாராளுமன்ற வேட்பாளருமான பிரவீண் கண்டேல்வால் வரவேற்புரையாற்றினார். இப்பொதுக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்றார்.

அனைத்து மாநிலங்களிலிருந்தும், அகில இந்திய வணிகர் சம்மேளன நிர்வாகிகளும், பொதுக்குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர். பொதுக்குழுவில் 2024 – 2026ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் தேசியத் தலைவராக மீண்டும் பாலகிருஷ்ண பார்ட்டியா, பொதுச்செயலாளராக பிரவீண் கண்டேல்வால் , தேசிய முதன்மை துணைத் தலைவராக விக்கிரமராஜா உள்ளிட்ட நிவாகிகள் தேர்வு ெசய்யப்பட்டனர் .

The post அகில இந்திய வணிகர் சம்மேளன தேசிய முதன்மை துணை தலைவராக விக்கிரமராஜா தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: