நீச்சல் போட்டியில் பதக்கங்களை குவித்த திண்டல் வேளாளர் வித்யாலயா பள்ளி மாணவர்கள்

 

ஈரோடு, ஆக.23: கோவை சகோதயா கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட அளவிலான 8வது நீச்சல் போட்டி பொள்ளாச்சி பி.ஏ. இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் ஈரோடு திண்டல் வேளாளர் வித்யாலயா பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு 65 தங்கப்பதக்கங்கம், 13 வெள்ளிப்பதக்கங்கம், 3 வெண்கலப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். மேலும், மாணவர்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையையும் வென்றனர்.

இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும் அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பள்ளியின் தலைவர் சி.ஜெயக்குமார் மற்றும் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், வேளாளர் அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர்கள் சி.பாலசுப்ரமணியம், எம்.யுவராஜா, முதன்மை முதல்வர் ஆர்.நல்லப்பன், முதல்வர் வி.பிரியதர்ஷினி, துணை முதல்வர் ஆர்.மஞ்சுளா, மக்கள் தொடர்பு அலுவலர் எம்.கார்த்திகேயன் ஆகியோர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

The post நீச்சல் போட்டியில் பதக்கங்களை குவித்த திண்டல் வேளாளர் வித்யாலயா பள்ளி மாணவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: