வீடு புகுந்து பணம் திருட்டு

சேலம், ஆக.23: சேலம் கருப்பூர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் மணிகண்டன் (42). கடந்த 19ம் தேதி, ராமலிங்கம் உடல்நிலை பாதிப்பு காரணமாக சேலம் குகையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார். அப்போது அவர், வீட்டை பூட்டிவிட்டு புறப்பட்டுள்ளார்.இதன்பிறகு அடுத்தநாள் (20ம் தேதி) வீட்டிற்கு வந்த மணிகண்டன், வீட்டில் கட்டியிருந்த நாய்க்கு உணவு கொடுத்துவிட்டு மீண்டும் புறப்பட்டு, தனது தந்தையை பார்க்கச் சென்றுள்ளார். நேற்று முன்தினம் காலை மீண்டும் தனது வீட்டிற்கு மணிகண்டன் வந்துள்ளார். அப்போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்துள்ளது. வீட்டினுள் இருந்த ₹10 ஆயிரம் பணம் மற்றும் பாத்திரங்கள் திருட்டு போய்யுள்ளது.நள்ளிரவு நேரத்தில் வீடு புகுந்த மர்மநபர்கள், அப்பொருட்களையும், பணத்தையும் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கருப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post வீடு புகுந்து பணம் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: