அவரிடம் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கவுதமன், குறுக்கு விசாரணை செய்தார். செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா, சகோதரர் அசோக் குமாரின் வங்கி கணக்குகள் தொடர்பான விவரங்களை சாட்சி கூண்டில் நின்றவாறு ஹரிஷ்குமார் பதிலளித்தார். வங்கியின் ஆவணங்கள், கவரிங் லெட்டர் தொடர்பாகவும் பல்வேறு கேள்விகள் செந்தில் பாலாஜி தரப்பில் குறுக்கு விசாரணையின் கேட்கப்பட்டது. குறுக்கு விசாரணை நேற்று நிறைவடையாததால் வழக்கை வரும் 28ம் தேதிக்கு நீதிபதி அல்லி தள்ளிவைத்தார். இதனிடையே, செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை வரும் 28ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
The post அமலாக்கத்துறை வழக்கில் முக்கிய சாட்சியான வங்கி மேலாளரிடம் செந்தில்பாலாஜி தரப்பு குறுக்கு விசாரணை: அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு appeared first on Dinakaran.